Advertisement

பொய் செய்தியை பரப்புகிறார்கள்: பழனிசாமி ஆவேசம்

"தமிழக மக்களுக்கு தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு வந்துவிட்டது, நான் போகும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க., கூட்டணி அலை வீசுகிறது" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் பழனிசாமி பேசியதாவது:

தி.மு.க., ஆட்சியில் நெசவுத் தொழில் முழுவதும் பாதிக்கப்பட்டுவிட்டது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த பல திட்டங்களை தி.மு.க., முடக்கிவிட்டது. இதனால் சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை பற்றி ஸ்டாலினுக்கு எந்தக் கவலையும் கிடையாது.

தமிழக மக்களுக்கு தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு வந்துவிட்டது, நான் போகும் இடங்களில் எல்லாம் அ.தி.மு.க., கூட்டணி அலை வீசுகிறது. வரும் லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்.

தி.மு.க.,வில் வேட்பாளர்கள் இல்லாமல் எங்கள் கட்சியில் இருந்து சென்றவர்களே சேலம், கோவையில் தி.மு.க., வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அ.தி.மு.க.,வில் அடையாளம் பெற்றவர்கள். இவர்களுக்கு மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவார்கள்.

அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை தருவதை நிறுத்திவிடுவார்கள் என திட்டமிட்டு சிலர் தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்.

நான் பலமுறை சட்டசபையில் இது குறித்து பேசி அழுத்தம் தந்ததால் தான் இந்த திட்டத்தை தி.மு.க., அரசு நிறைவேற்றியது. இதற்கு காரணம் அ.தி.மு.க., தான். மாதம் ஆயிரம் ரூபாய் தருவதை நிறுத்தினால் சட்டசபையில் நானே போராடுவேன்.

இவ்வாறு அவர் பேசினார்



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்