தமிழகத்தில் பா.ஜ.,வின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது: பழனிசாமி

"மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பா.ஜ.,வின் எண்ணம் ஒருபோதும் தமிழகத்தில் ஈடேறாது" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வு ரத்து, போதைப்பொருள் புழக்கம், காவிரி-மேகதாது விவகாரம் என அனைத்து முக்கிய பிரச்னைகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டசபையில் முதல்வரிடம் கேள்வி எழுப்பினேன். அவர், பதில் சொல்ல முடியாமல் திணறினார்.

அறிக்கை வாயிலாகவும் ஊடகங்கள் வாயிலாகவும் கேட்டேன். அதற்குப் பதில் சொல்ல முடியாமல் நழுவினார். இப்போது எஜமானர்களான உங்களிடமே வந்தேன்.

40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முன்னிலையில் மேடையில் கேள்விகளைக் கேட்டேன். இதற்குப் பதில் சொல்ல திராணியில்லாமல் என் மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைத்தாத்.

அவர்கள் என்னைப் பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் அளித்துவிட்டேன். நான் கேட்ட ஒரு கேள்விக்காவது அவருக்கு பதில் சொல்ல திராணி இருந்ததா?

இல்லையெனில், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, தமிழகத்தைக் காக்கத் தவறிய பொய் வாக்குறுதிகளால் பொதுமக்களையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய ஆட்சி தான், தி.மு.க., ஆட்சி.

ஒரு லோக்சபா உறுப்பினரின் அடிப்படைக் கடமையான தொகுதி மேம்பாட்டு நிதியைக் கூட சரிவரக் கேட்டு பெறமுடியாமல், வெறும் 25 சதவீதம் மட்டுமே செலவிட்டு, 75 சதவீத ஒதுக்கீட்டை வீணடித்த தி.மு.க., கூட்டணி எம்.பி.,க்களுக்கு மீண்டும் வாக்களித்து என்ன பயன்?

இவர்கள் ஒருபுறம் என்றால், மாநிலத்தின் உரிமைகளை மதிக்காத, நாட்டின் கூட்டாட்சியில் நமக்குரிய பங்கை அளிக்க மறுக்கும் பா.ஜ., அரசு மறுபுறம் மதத்தின் மூலம் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியே கொள்கையாக வைத்துக்கொண்டு, மாநில கட்சிகளில் பிளவுகள் ஏற்படுத்த முயன்று, அதன் மூலம் அரசியல் லாபம் தேடும் பா.ஜ.,வின் எண்ணம் ஒருபோதும் தமிழகத்தில் ஈடேறாது.

தி.மு.க.,வுக்கு வாக்களிப்பதும், பா.ஜ.,வுக்கு வாக்களிப்பதும் ஒன்று தான்; அது நம் மாநிலத்தின் எதிர்காலத்தையே பாதித்துவிடும். மாநிலத்தின் உரிமைகளை மறுக்கும் தேசிய கட்சிகளையும், 38 எம்.பி.,க்கள் இருந்தும் மௌனியாக இருந்து மாநில உரிமைகளை தாரைவார்த்த தி.மு.க.,வையும் ஓங்கி அடிப்போம்.

அதேநேரம், அ.தி.மு.க., கூட்டணியின் வேட்பாளர்கள் தமிழகத்தின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலிப்பார்கள் என்ற வாக்குறுதியை நான் உங்களுக்கு அளிக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


J.V. Iyer - Singapore, சிங்கப்பூர்
19-ஏப்-2024 06:23 Report Abuse
J.V. Iyer தேர்தலுக்குப் பிறகு காலில் தான் விழவேண்டும்.
Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
19-ஏப்-2024 06:15 Report Abuse
Kasimani Baskaran திமுகவின் ஆதரவு தேவை என்பதை மனத்தில் கொண்டு தமிழர்களுக்கு இப்படிப்பட்ட கெடுதலை செய்திருக்கிறார். மடியில் கனமிருப்பதால் வந்த பிரச்சினை.
Bhakt - Chennai, இந்தியா
18-ஏப்-2024 22:12 Report Abuse
Bhakt ஜூன் 4ம் தேதி பி ஜே பி உள்ள வந்திடும்.
Thirunavukkarasu Sivasubramaniam - Pollachi, இந்தியா
18-ஏப்-2024 14:38 Report Abuse
Thirunavukkarasu Sivasubramaniam உங்களிடம் மக்களாகிய நாங்கள் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். கொடநாடு கொலையில் யார் குற்றவாளி? டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டில் உங்கள் சம்பந்தியின் பங்கு என்ன? அம்மாவின் நம்பிக்கைக்குரிய ops அவர்களுக்கு துரோகம் செய்த்தில் உங்கள் மீது ஏன் கட்சி நடவடிக்கை எடுக்கக்கூடாது?
jayvee - chennai, இந்தியா
18-ஏப்-2024 11:59 Report Abuse
jayvee அதாவது அதிமுகவை ஆட்டைப்போட்டு எடப்பாடி தீமுகவாக மாற்ற முயலும்போது bjp அதை தடுத்தது என்று சொல்லவருகிறீர்களா ?
Palanisamy Sekar - Jurong-West,
18-ஏப்-2024 10:12 Report Abuse
Palanisamy Sekar இப்போதெல்லாம் திமுகவை கண்டுக்குறதே இல்லை அப்படித்தானே பழனிச்சாமி? உங்க கஷ்டம் உங்களுக்கு. பாஜக தான் தமிழகத்தில் இல்லவே இல்லைன்னு நீங்களும் சொல்றீங்க உங்க பங்காளிகளும் சொல்றீங்க. ஆனா மூச்சுக்கு ஒருதரம் பாஜக என்று சொல்லாமல் நீங்கள் உயிர் வாழவே முடியாது போல. உங்ககிட்ட ஒன்னு கேட்கணும், உங்கமேல பழிசுமத்திய அந்த கொடநாடு கொலைவழக்கு என்னாச்சுன்னு கேட்டு ஒரு அறிக்கை விட்டு பாருங்களேன். பார்ப்போம் உங்க பங்காளி ஸ்டாலின் என்ன பதில் சொல்றாருன்னு தெரிஞ்சிப்போம்
Anbuselvan - Bahrain, பஹ்ரைன்
18-ஏப்-2024 10:06 Report Abuse
Anbuselvan ஜூன் ஆறாம் திகதி நீங்க அவர்கள் பின்னாடி போறீங்களா இல்லை அவர்கள் உங்கள் பின்னாடி வருவார்களா என தெரிந்து விடும். ஆக மொத்தத்தில், இப்போதைய நிலவரப்படி, எனக்கு தெரிந்த மக்களிடம் (தஞ்சை மாவட்டம், சென்னை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கிட்ட தட்ட நூறு பேர்) உரையாடியதில், அதிமுக பிளவு படாமல் இருந்திருந்தால் மற்றும் கூட்டணி அமைத்து இருந்தால் அவர்கள் குறைந்தது முப்பத்தி ஐந்து தொகுதிகளாவது கை பற்றி இருக்கலாம் என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது. அதே மக்கள் திரு அண்ணாமலை bjp க்கு பெரும் அளவில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க வைப்பார் எனவும் கூறினர்.
Palanisamy Sekar - Jurong-West,
18-ஏப்-2024 07:40 Report Abuse
Palanisamy Sekar சட்டமன்றத்தில் ஊழல் சிக்கிய அமைச்சர்களை பற்றி பேச வக்கில்லை. பாராளுமன்றத்தில் போயி அப்படியே கேள்விக்கணைகளாக கேட்டுவிட்டுதான் வருவார்கள். எதிர்க்கட்சி தலைவர் மாதிரியா நடந்துகொள்கின்கிறீர்கள்? பயம் கொடநாடு கொலைவழக்கு பற்றிய பயம் மட்டுமே தெரிந்தது. அதிமுக சீரழிய உங்களின் தலைமையே காரணம். பொன்முடியை பற்றி, ஐ பெரியசாமியை பற்றி செந்தில்பாலாஜி பற்றி பேசவும்போது அப்படியே சப்தமின்றி கேட்டதை பார்த்தோமே. அமைக்காஹ்ர்கள் பதவி விலக எவ்வளவு போராட்டம் நடத்தி ஸ்தம்பிக்க வைத்தீர்கள்? சும்மா வெத்து அறிக்கையை போட்டுவிட்டு கடமை முடிந்தது என்று போவதற்கு நீங்கள் ஒரு மு முதல்வர் ..
Cheran Perumal - Radhapuram, இந்தியா
18-ஏப்-2024 02:24 Report Abuse
Cheran Perumal திமுக விடம் பணம் வாங்கிக்கொண்டு இவர்கள் எவ்வளவு கத்தினாலும் மக்களிடம் எடுபடப்போவதில்லை.
R.MURALIKRISHNAN - COIMBATORE, இந்தியா
17-ஏப்-2024 23:04 Report Abuse
R.MURALIKRISHNAN தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி எங்கே பழனிசாமி என்று அழைக்கப்படுவாராக
மேலும் 6 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்