'சிறந்த வியாதி' என உளறிய அமைச்சர்

துாத்துக்குடி தொகுதி தி.மு.க., வேட்பாளர் கனிமொழி எம்.பி.,யை ஆதரித்து சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ''கனிமொழி சிறந்த பாராளுமன்ற வியாதி,'' எனகுறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், மறுபடியும் பாராளுமன்ற வியாதி என பேச வந்தார். உடனே சுதாரித்து, சிறந்த பார்லிமென்ட் எம்.பி., என குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்ட கனிமொழி முகம் சுளித்தபடி காணப்பட்டார்.

இதற்கிடையே, கனிமொழி எம்.பி., பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் திடீரென, 'அண்ணாமலையார் வந்துவிட்டார்' என, சத்தமாக கூச்சலிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த கனிமொழி ஒரு நிமிடம் பேச்சை நிறுத்தினார்.

உடனே, அந்த நபர், வானத்தில் கருடன் வட்டமடிப்பதைக் காண்பித்து, 'கருடன் வந்துள்ளார்; அதையே கூறினேன்' என மாற்றிக் கூறினார். இதனால், கூட்டத்தில் லேசான சலசலப்பு ஏற்பட்டது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்