சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த, தங்கவேலு என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முன்னதாக தேர்தல் பணியில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பலரின் பரிசோதனை முடிவுகள் நேற்று மற்றும் நேற்று முன் தினம் வந்தன. அதில் நூற்றுக்கணக்கானோருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால் அவர்கள் மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியின் தேர்தல் அலுவலராக தங்கவேலு என்பவரை நியமித்திருந்தது ஆணையம். அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் தற்போது பாசிடிவ் என வந்துள்ளது. எனவே அவரை ஓட்டுப்பதிவு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன் மாற்றிவிட்டு, கண்ணன் என்ற மற்றொரு அலுவலரை நியமித்துள்ளனர். இது ஓட்டு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாசகர் கருத்து