150 இடங்களில் மட்டுமே பா.ஜ., வெற்றி பெறும்: ராகுல் காந்தி கணிப்பு

"பா.ஜ., ஆட்சியில் பணமதிப்பிழப்பு, தவறான ஜி.எஸ்.டி., அதானி போன்றவர்களை ஆதரித்து வேலைவாய்ப்புகளை குறைத்தது போன்றவற்றால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்.,19ம் தேதி துவங்க உள்ளது. இதையொட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி மற்றும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:

லோக்சபா தேர்தல் வெற்றி குறித்து கடந்த 15, 20 நாள்களுக்கு முன்பு வரையில் பா.ஜ., 180 தொகுதிகளில் வெல்லும் எனக் கணித்திருந்தேன். பொதுவாக, இந்தக் கணிப்புகளில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் தற்போதைய நிலவரங்களின்படி அவர்களால் 150 தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடியும். இண்டியா கூட்டணிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியுள்ளது.

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் வரக்கூடிய தகவல்கள் இதையே தெரிவிக்கின்றன. நாங்கள் முன்னேறி வருகிறோம். உ.பி.,யில் சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளோம்.

பா.ஜ.,வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., அதானி போன்றவர்களை ஆதரித்து வேலைவாய்ப்புகளை குறைத்தது போன்றவற்றால் அனைத்து தரப்பினரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நாட்டில் மீண்டும் வேலைவாய்ப்பை வலுப்படுத்துவதே எங்களின் முதல் வேலையாக இருக்கும்.

உ.பி.,யில் உள்ள பட்டதாரிகளுக்கும் பட்டயப் படிப்பை முடித்தவர்களுக்கும் பயிற்சிகளை வழங்குவோம். இந்த பயிற்சி காலத்தில் இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு 1 லட்ச ரூபாயை டெபாசிட் செய்வோம்.

உலகிலேயே மிகப் பெரிய அளவில் கொள்ளையடிக்கும் திட்டமாக தேர்தல் பத்திரங்கள் உள்ளன. கட்சிகளுக்கான நிதியில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக தேர்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால், இது கொள்ளையடிப்பதற்காகத் தான் என்பது நாட்டின் தொழில் அதிபர்களுக்குத் தெரியும். ஊழலின் சாம்பியனாக மோடி இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Vijay D Ratnam - Chennai, இந்தியா
18-ஏப்-2024 18:11 Report Abuse
Vijay D Ratnam ஓங்க கட்சி எத்தனை சீட் ஜெயிக்கும்னு கவலைப்படுங்க மாமா. பாஜக 150 சீட் தான் வெல்லுமாம். வந்துட்டாரு கோடாங்கி குறி சொல்ல. 200 சீட் தாண்டுனா தூக்குல தொங்க தயார்னு சொல்ல வேண்டியதுதானே. 2014 ல அந்தாளு போட்டு பொளந்ததுல கை காலெல்லாம் ஒடஞ்சி, மூஞ்சி முகரையெல்லாம் பெயர்ந்து போயி ஆக்சிடென்ட் ஆன அம்பாஸடர் கார் மாதிரி பெட்ல கிடந்தீங்க. அடுத்து 2019 ல வாங்குன உதைல கட்சி கோமா ஸ்ட்டேஜில போயி ஐசியூ ல கெடக்குது. இந்தா இப்போ 2024 ல ஒங்க கட்சியை தூக்கிட்டு போய் அடக்கம் பண்ணி நாற்பது நாட்கள் கழித்து கருமாதி சோறு போட ரெடியாயிட்டாரு. இப்போ போயி அந்த கட்சி எத்தனை சீட்டு வாங்கும்னு இவரு பெனாத்துறாரு.
என்றும் இந்தியன் - Kolkata, இந்தியா
18-ஏப்-2024 17:42 Report Abuse
என்றும் இந்தியன் இதுக்குத்தான் சொல்வது கண்ணாடியில் பார்த்து பேசவேண்டாம்
saravan - bangaloru, சவுதி அரேபியா
18-ஏப்-2024 16:45 Report Abuse
saravan காங்கிரஸ் என்ன நிலைமையில் உள்ளது என்பதாவது இந்த ஆளுக்கு தெரியுமா ... ஒரு பாட்டு ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி...கண்ணதாசன் பாட்டு
V Gopalan - Bangalore, இந்தியா
18-ஏப்-2024 16:25 Report Abuse
V Gopalan why he is bothered about the bjp getting 150 seats or more? first of all let him say as to whether he will win in wayanad or congress will get a minimum of 100 seats? let him say their principles, policy et all instead of go on grinding the same flour of adani/ambani. let him go through the speech given by shri suhel seth.
வாய்மையே வெல்லும் - மனாமா, பஹ்ரைன்
18-ஏப்-2024 16:03 Report Abuse
வாய்மையே வெல்லும் ராவுளுக்கு மண்டையில் மசாலா வைக்காமல் இறைவன் அனுப்பிவிட்டான் போலும். அதனால் தான் பிதற்றல் தூக்கலாக தெரியுது .
Sivaraman - chennai, இந்தியா
18-ஏப்-2024 13:09 Report Abuse
Sivaraman பதினைந்து இவங்களுக்கு வரலாம்
Anbuselvan - Bahrain, பஹ்ரைன்
18-ஏப்-2024 09:58 Report Abuse
Anbuselvan நன்றாகவே மாத்தி யோசிக்கிறார் இவர்.
vijay - coimbatore, இந்தியா
18-ஏப்-2024 09:49 Report Abuse
vijay காங்கிரஸ் கட்சி ஜெயிப்பது எத்தனை? மொத்த இன்டி கூட்டணி ஜெயிப்பது எத்தனை? சரி ஒருவேளை ஜெயித்துவிட்டால் யாருன்னே பிரதமர்? அண்ணே, நீங்க முதலில் வயநாட்டில் ஜெயிப்பீர்களா என்று பார்ப்போம்?. வடஇந்தியாவில் மட்டுமே உங்க கூட்டணிக்கு எவ்வளோ சீட்டு கிடைக்கும்?.
SIVA - chennai, இந்தியா
18-ஏப்-2024 09:10 Report Abuse
SIVA கடந்த ஐந்து மாநில தேர்தலில் சனாதனம் பற்றி பேசி இங்கு உள்ளவர்கள் அங்கு பி ஜே பி ஐயே வெற்றி பெற வைத்தனர் , இப்போது ஒரு ரூபாய் வரி செலுத்தினால் அவர்களுக்கு மட்டும் மூன்று ரூபாயாக திருப்பி கொடுக்கின்றனர் என்று பேசுகின்றனர் , அப்படி என்றால் பி ஜே பி அங்கே அவர்களுக்கு நல்லது செய்கின்றது என்று தானே அர்த்தம் , முதலில் உங்களை சுற்றி என்ன நடக்கின்றது என்ன என்று கவனிக்கவும் ......
vbs manian - hyderabad, இந்தியா
18-ஏப்-2024 08:53 Report Abuse
vbs manian இவர் கட்சிக்கு எவ்வளவு சீட்டு கிடைக்கும் என்று ஏன் சொல்லவில்லை.
மேலும் 16 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்