காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் சிட்டிங் எம்.எல்.ஏ., சுந்தர், அ.தி.மு.க., வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், அ.ம.மு.க., வேட்பாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
அ.தி.மு.க.,வில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த ரஞ்சித்குமாருக்கு சீட்டு வழங்காததால், அதிருப்தி அடைந்த அவர், அ.ம.மு.க., வேட்பாளராக களத்தில் குதித்து, இரு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
உத்திரமேரூர் பெரிய ஏரியை துார் வாரி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியான அனுமந்தண்டலம் செய்யாறு முகத்துவாரத்தில் துவங்கி, உத்திரமேரூர் பெரிய ஏரிவரை கால்வாய்களை முழுவதுமாக துார்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உத்திரமேரூர் பகுதியை சுற்றி இயங்கும் சுற்றி இயங்கும் சட்டவிரோத கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுப்பேன். நெய்யாடுவாக்கத்திலிருந்து இணையனார் வேலுார் வரை செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டித் தர உரிய நடவடிக்கை எடுப்பேன். என பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் பிரசாரத்தில் ரஞ்சித்குமா் அளித்து வருகிறார்.
இதற்கிடையில் காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த சசிகலாவை அ.ம.மு.க., வேட்பாளர் ஆர் .வி.ரஞ்சித்குமார் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வாசகர் கருத்து