இது எங்க ஏரியா... உள்ளே வராதே!

மத்திய சென்னை பா.ஜ., வேட்பாளர் வினோஜ், திருவல்லிக்கேணியில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்தார். அவரது ஆதரவாளர்கள், நடுக்குப்பம் தெரு முழுதும் பா.ஜ., சார்பில் கொடி, தோரணம் கட்டிக் கொண்டிருந்தனர்.

அங்கு, ஆதரவாளர்களுடன் வந்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'இது எங்களுக்கான பகுதி; இங்கு தோரணம் கட்டக்கூடாது' என, பா.ஜ.,வினரிடம் தகராறில் ஈடுபட்டார். அதற்கு பா.ஜ.வினர், 'எங்கள் வேட்பாளருக்கு நாங்கள் கட்சி பணி செய்கிறோம்; வேண்டுமென்றால் நீங்களும் இதேபோல் செய்து கொள்ளுங்கள்' என, கூறினர்.

இதனால், அவர்களிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், பா.ஜ.,வினர் தோரணம் கட்டி பிரசாரம் செய்து முடித்தனர். இது குறித்து, போலீசில் புகார் அளிக்கப்படவில்லை.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்