தருமபுரியில் சவுமியா போட்டி: பட்டியலை திருத்திய பா.ம.க.,

தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, அரசாங்கம் என்பவரின் பெயர் அறிவிக்கட்ட நிலையில், அதில் திருத்தம் செய்து பா.ம.க., வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.,வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இன்று காலை 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பா.ம.க., அறிவித்தது. காஞ்சிபுரம் (தனி) தொகுதிக்கான வேட்பாளரின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

திண்டுக்கல் - திலகபாமா, அரக்கோணம் - வழக்கறிஞர் கே.பாலு, ஆரணி - கணேஷ் குமார், கடலூர் - தங்கர்பச்சான், மயிலாடுதுறை - ஸ்டாலின், கள்ளக்குறிச்சி - இரா. தேவதாஸ், தருமபுரி - அரசாங்கம், சேலம் - ந. அண்ணாதுரை, விழுப்புரம் - முரளி சங்கர் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலில் அன்புமணியின் பெயர் இடம்பெறாதது கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில், தருமபுரியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அரசாங்கம் என்பவருக்குப் பதில் அன்புமணியின் மனைவி சவுமியா போட்டியிட உள்ளதாக பா.ம.க., அறிவித்துள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்