உதயநிதி புறக்கணிப்பு கொ.ம.தே.க., அதிருப்தி

தர்மபுரி லோக்சபா தொகுதி, தி.மு.க, வேட்பாளர் வக்கீல் மணியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி, தர்மபுரி, ஒடசல்பட்டி கூட்ரோடு, பென்னாகரம் ஆகிய இடங்களில் நடந்த பிரசார கூட்டங்களில் பேசினார். அதில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டார். ஆனால், கொ.ம.தே.க., நிர்வாகிகள் பெயர்களை குறிப்பிடவில்லை. இதனால், அக்கட்சி தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து அக்கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:

கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி பேசியபோது, அவருக்கு முன் அதிக எண்ணிக்கையில், கொ.ம.தே.க., கொடிகளை தொண்டர்கள் ஏந்தியிருந்தனர். அதை பார்த்தாவது, நிர்வாகிகள் பெயரை அவர் கூறியிருக்கலாம். கொ.ம.தே.க., சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் என, 500க்கும் பங்கேற்ற நிலையில், அக்கட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பேசாததால், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடாமல், ஒதுங்கி கொள்வதாக கூறுகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்