கொ.ம.தே.க., ரூ.300 அ.தி.மு.க., ரூ.250

லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கொ.ம.தே.க., 300 ரூபாய், அ.தி.மு.க., 250 ரூபாய் என, வாக்காளர்களுக்கு போட்டி போட்டு, 'கவனிப்பு' செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில், தி.மு.க., கூட்டணியில், கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி, பா.ஜ., வேட்பாளர் ராமலிங்கம், நா.த.க., வேட்பாளர் கனிமொழி உள்பட, 40 பேர் களத்தில் உள்ளனர். தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். நேற்று மாலை, 6:00 மணியுடன், பிரசாரம் முடிந்தது.

அதைத் தொடர்ந்து ஒரு ஓட்டுக்கு, கொ.ம.தே.க., சார்பில், 300 ரூபாய், அ.தி.மு.க., சார்பில், 250 ரூபாய் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் தொகுதியில் வெற்றியை தீர்மானிப்பது, வைட்டமின், 'ப' என்பது உறுதியாகி உள்ளது. இரு கட்சியினரும் போட்டிபோட்டு மக்களுக்கு பண பட்டுவாடாவை அரங்கேற்றி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்