மக்களிடம் கதை சொல்கிறார், சு.வெங்கடேசன்: அ.தி.மு.க. கொதிப்பு

''ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரத்தை தேடி கொள்ளும் வேலைகளிலும் சு.வெங்கடேசன் ஈடுபட்டு வருகிறார்" என, மதுரை அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சு.வெங்கடேசனின் செயலற்ற தன்மை மக்களுக்கு போய்ச் சேர வேண்டும். அவருடைய எம்.பி., நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை. அரசு செய்யும் வேலைகளுக்கு அவர் பெயர் எடுத்துக் கொள்ள பார்க்கிறார்.

2019 முதல் 2023 வரை 17 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்ட எம்.பி.., நிதியில் 5 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் 4.3 கோடி ரூபாயை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்.

2019 முதல் 260 திட்ட அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டு 228 திட்ட அறிக்கைகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. அதில், கடந்த 5 வருடத்தில் 73 பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.

155 வேலைகள் இன்னும் முடியவில்லை. ஆனால், மக்களுக்காகப் பேசுவதாக கதை சொல்லி வருகிறார். ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவும், விளம்பரத்தை தேடி கொள்ளும் நோக்கிலும் சு.வெங்கடேசன் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்