'நாய் போல நன்றி உள்ளவனாக இருப்பேன்'

''அ.தி.மு.க.,வுக்கும், பழனிசாமிக்கும் நாய் போல எப்போதும் நன்றிஉள்ளவனாக இருப்பேன்,'' என, துாத்துக்குடி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வேலுமணி உருக்கமாக பேசினார்.

துாத்துக்குடி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். இவர், சென்னை வடபழனியில் புத்துார் கட்டு போன் அண்டு ஜாயின்ட் சென்டர் என்ற பெயரில் எலும்பு முறிவு சிகிச்சை மையம் நடத்துகிறார்.

கோவில்பட்டியில் நடைபெற்ற அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

துாத்துக்குடியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் கனிமொழியின் கணவர், அவரது மகன் இந்திய குடியுரிமை பெறவில்லை. இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு தான் மண் மற்றும் மக்கள் மீது பாசம் இருக்கும்.

நாய் நன்றி உள்ளது. அதுபோல், நான் உயிருள்ளவரை அ.தி.மு.க.,வுக்கும், தொண்டர்களுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்