தேனி:தேனியில் உள்ள சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு லாரிகள் வந்து சென்றது குறித்து ஆவணத்தில் பதிவு செய்யாதது ஏன் என போடி தி.மு.க., வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
தேனி கொடுவிலார்பட்டி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மையத்தில் மர்ம வாகனம் வந்ததாக தகவல் கிடைத்து, தங்கத்தமிழ்செல்வன் வந்தார்.
ஏப்.,13ல் மையத்திற்கு வந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கான மளிகைப் பொருட்கள் லாரி, மற்றொரு லாரி வந்து சென்றது குறித்து ஆவணத்தில் ஏன் பதிவு செய்யவில்லை என டி.எஸ்.பி.,க்கள் முத்துராஜ், ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணி ஒருங்கிணைப்பாளர் சையதுபாபுவிடம் விளக்கம் கேட்டார்.
வாசகர் கருத்து