ஓட்டு கேட்டு போகும் சீமானை பாட்டு பாடச் சொல்லும் கூட்டம்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம், ராகத்துடன் பாட்டு பாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பாட மறந்தாலும், கட்சித் தொண்டர்கள் அவரை பாடும்படி வலியுறுத்துகின்றனர்.

அவரும் உற்சாகமாகி, 'ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிற்காதே... கண்ட கண்ட சின்னம் கண்டு கலங்கி நிற்காதே... ஓட்டு போட போற அம்மா ஒதுங்கி நிற்காதே... உழைக்கும் மக்கள் சின்னம், இந்த ஒலிவாங்கி சின்னம்... நாள்தோறும் பாடுபட்டோம்; ஆனாலும் துன்பப்பட்டோம்... யார் யாருக்கோ ஓட்டு போட்டோம்... ஓட்டாண்டியாகி விட்டோம்' என்று பாடி வருகிறார். அவர் பாடலுக்கு கட்சியினரும் உற்சாக குரல் எழுப்புகின்றனர்.

அதேபோல், அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, மனித உரிமை காக்கும் கட்சி தலைவரான நடிகர் கார்த்திக், தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறார். அவர் தேனியில் பிரசாரம் செய்தபோது, அவரது ஆதரவாளர்கள் அவரை பாடல் பாடும்படி வலியுறுத்தினர். அவரும் தான் நடித்த, அமரன் படத்தில் பாடிய பாடலை பாடினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்