Advertisement

வி.சி., கட்சி பிரமுகர் மீது தாக்குதல் 9 பேர் மீது புகார்; இருவர் கைது

கிருஷ்ணகிரி: சூளகிரி தாலுகா, மடம் செம்பரசனப்பள்ளியை சேர்ந்தவர் முனிசந்திரன், 35. வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி வி.சி., கட்சி செயலாளர்.
இவருக்கும் கிருஷ்ணகிரி வி.சி., மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷிற்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை முனிசந்திரன் தன் நண்பர் வினோத்துடன் கர்நாடக மாநிலத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பினார்.
கே.திப்பனப்பள்ளி சமத்துவபுரம் அருகில் வந்த அவர்களை, கிருஷ்ணகிரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த அகில், 28, தலைமையில் வந்த கும்பல், கத்தியால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த முனிசந்திரன் புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி, அகில் மற்றும் கிருஷ்ணகிரி ரயில்வே காலனியை சேர்ந்த பிரசாத், 19 ஆகிய இருவரை செய்தனர்.
மேலும் வெற்றி, தனுஷ், த.வா.க., பிரமுகர் சூர்யபிரகாஷ், வி.சி., கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ் மற்றும் வி.சி., கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் மற்றும் இருவர் என மொத்தம், 7 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்