போலீஸ் அதிகாரிகள் மாற்றம் ஆணையத்தில் அ.தி.மு.க., மனு

சென்னை :
'இடமாற்றம் செய்த போலீஸ் அதிகாரிகளை பழைய இடத்திலேயே மீண்டும் பணியமர்த்த வேண்டும்' என தேர்தல் கமிஷனிடம் அ.தி.மு.க. சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் பாபுமுருகவேல் அனுப்பியுள்ள புகார் மனு:மத்திய மண்டல ஐ.ஜி. - மேற்கு மண்டல ஐ.ஜி. - கோவை போலீஸ் கமிஷனர் கோவை ஊரகப் போலீஸ் எஸ்.பி. ஆகியோர் தேர்தல் கமிஷனால் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் .அவர்கள் எதிர்க்கட்சியான தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டனர். தற்போது தேர்தல் முடிந்த நிலையில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை பழைய இடத்திலே மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)