தமிழகத்துக்கு தனிக்கொடி... எஸ்.சி, எஸ்.டி.க்கு தனி வங்கி: வி.சி., தேர்தல் அறிக்கை

லோக்சபா தேர்தலை ஒட்டி வி.சி., தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு தனிக்கொடி முதல் எஸ்.சி, எஸ்.டி.,க்கு தனி வங்கி வரையில் ஏராளமான வாக்குறுதிகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வி.சி., தேர்தல் அறிக்கையை திருமாவளவளன் இன்று வெளியிட்டார். அப்போது திருமாவளவன் பேசுகையில், "பா.ஜ.,வை வீழ்த்துவதற்கான தி.மு.க.,வின் முயற்சிக்கு வி.சி., துணை நிற்கும். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயர்த்துவோம். மத்திய அரசில் விவசாயத்துக்கென்று தனி பட்ஜெட் என அனைவரின் நலனையும் முன்னிறுத்தும் திட்டங்களை வி.சி., தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது" என்றார்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும். கவர்னரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது.

ராமர் கோயில் கட்டியதில் நடந்த ஊழல் முறைகேடுகள் விசாரிக்கப்படும்.

அம்பேத்கர் பிறந்த நாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தும் திட்டத்தை எதிர்ப்போம்.

மின்னணு வாக்கு எந்திஙத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை தொடர்ந்து பயன்படுத்த வி.சி., வலியுறுத்தும்

இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டும்.

65 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தனி வங்கித் திட்டம்

ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ரத்து

தமிழகத்துக்கு தனிக்கொடி உருவாக்கப்படும்.

இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை உருவாக்குதல்

ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம்

இந்துத்துவ சக்தியார் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுதல்

கச்சத்தீவை மீட்க லோக்சபாவில் வி.சி., பாடுபடும்.

மத்திய, மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்குதல்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும்.

தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்.

அனைத்து மொழிகளிலும் அம்பேத்கரின் நூல்கள்.

விவசாயக் கடன் ரத்து, விவசாயத்துக்கு தனி பட்ஜெட்

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழித்தல்

இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல்

கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துதல்

நீட் தேர்வு ரத்து என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.


Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
16-ஏப்-2024 07:11 Report Abuse
Kasimani Baskaran இந்துக்கட்வுள்களை அவமதிக்கும் இதுபோன்ற குப்பைகளை எப்படித்தான் ஊருக்குள் விடுகிறார்களோ...
Ram - ottawa, கனடா
10-ஏப்-2024 07:39 Report Abuse
Ram இந்த எஸ் சி எஸ் டி அரசியலால்தான் நாடே நாசமாகிக் கொண்டிருக்கிறது, இவர்களால் திறமையானவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை .... இந்த முறையை ஒழிப்போம்
krishnamurthy - chennai, இந்தியா
10-ஏப்-2024 07:26 Report Abuse
krishnamurthy வளமான கற்பனை.
இராம தாசன் - சிங்கார சென்னை, இந்தியா
09-ஏப்-2024 21:31 Report Abuse
இராம தாசன் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ரத்து // நமக்கு தான் ஜி.எஸ்.டி என்றால் என்ன என்றே தெரியாது அதனால் மொத்தமா முடிச்சு விட்டுவிடலாம்
இராம தாசன் - சிங்கார சென்னை, இந்தியா
09-ஏப்-2024 21:30 Report Abuse
இராம தாசன் இதுவரைக்கும் நீங்க பாராளுமன்ற உறுப்பினரா இருந்து என்ன செஞ்சீங்க. கட்ச தீவை மீட்க நீங்க என்ன பண்ணீங்க? //எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தனி வங்கித் திட்டம் // - நீங்களே ஏன் அவர்களை ஒதுக்கி வைக்கிறீர்கள்?
Nagarajan S - Chennai, இந்தியா
09-ஏப்-2024 19:24 Report Abuse
Nagarajan S எஸ்சி & எஸ்டிக்கு தனி வங்கி என்றால் அவர்களை தவிர வேறு யாரும் கணக்கு தொடங்க முடியாதோ?
sugumar s - CHENNAI, இந்தியா
09-ஏப்-2024 18:07 Report Abuse
sugumar s highly biased and unfair manifesto. such persons should be totally boycotted by tn people.
sridhar - Dar Es Salaam, தான்சானியா
09-ஏப்-2024 16:50 Report Abuse
sridhar அன்னே புத்தகத்தை மூடிவிட்டு மொத்தத்தையும் சொல்லுவீங்களா
ponssasi - chennai, இந்தியா
09-ஏப்-2024 16:49 Report Abuse
ponssasi மாதாமாதம் தனக்கு ஒதுக்கும் நிதியில் இருந்து கமிஷன் பெறப்படும், மாதம் தவறாமல் ஊதியம் கிடைக்கும், எதுவும் செய்யமுடியாத தேர்தல் அறிக்கையை நம்பி தலித்துகள் இப்பொது இருக்கும் நிலையில் அப்படியே இருக்கவேண்டும். எனக்கு ஒரு சந்தேகம் தமிழகத்தில் தலித்துகள் முன்னேற்றத்துக்கு பாடுபடுவதாக சொல்லும் விசிக தனக்கு கிடைக்கும் இரு தொகுதிகளில் ஏன் மாற்றி வேட்பாளர்களை நிறுத்தக்கூடாது?
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai, இந்தியா
09-ஏப்-2024 16:01 Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN பானை உடையாமல் கரை சேருமா என்பது ஒரு கேள்விக்குறி தான். இவரு தேர்தலுக்கு முன்பு கோவில் கோவிலா ஏறி இறங்குவார். கரை ஏறிய பின், அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோவில் என்றும், அவற்றை பீரங்கி வைத்து தகர்த்துவிட்டு புத்த விகாரம் கட்டவேண்டும் என்பார். இந்த கட்சிக்கு செலவு செய்வதற்க்கு இருக்கவே இருக்கிறார்கள். கலிகாலம் என்றால் இது தான்.
மேலும் 6 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்