மோடியிடம் இருப்பது இரண்டே யோசனைகள் தான்: ராகுல் விமர்சனம்

"நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களின் கருவியாக மோடி இருக்கிறார். அவர்களின் நலன்களைக் காத்து அவர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்கிறார்" என, காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி பேசினார்.

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரசின் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இண்டியா கூட்டணியில் உள்ள இ.கம்யூ., சார்பில் ஆனி ராஜாவும் பா.ஜ., கேரள மாநிலத் தலைவர் சுரேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், வயநாட்டில் 2வது நாளாக ராகுல் காந்தி ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியாவை மாற்றி அமைக்கக் கூடிய ஆவணமாக காங்கிரசின் தேர்தல் அறிக்கை உள்ளது. இந்தியாவின் அரசியல் அமைப்பை அழிப்பதற்கு பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் முயற்சி செய்கின்றன.

இந்த நாட்டின் அரசியல் அமைப்பைக் காப்பதற்கு காங்கிரஸ் போராடிக் கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பின்மை நிலவுவது குறித்தோ விலைவாசி உயர்வு குறித்தோ மோடி ஒருநாளும் பேசுவது இல்லை.

நாட்டில் உள்ள பெரும் பணக்காரர்களின் கருவியாக மோடி இருக்கிறார். அவர்களின் நலன்களைக் காத்து அவர்களின் கடன்களையும் தள்ளுபடி செய்கிறார்.

இந்திய மக்களை உண்மையான பிரச்னைகளில் இருந்து திசை திருப்புவதையே நோக்கமாக வைத்திருக்கிறார். இதன் காரணமாக, சில நேரங்களில் அவர் கடலுக்கு அடியில் பூஜை செய்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அவரிடம் இருப்பது 2 விஷயங்கள் தான். ஒன்று, இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவோம். அடுத்து, நிலவுக்கு மனிதனை அனுப்புவோம் என்கிறார். ஆனால், வேலையில்லா திண்டாட்டம் இருப்பதைப் பற்றியெல்லாம் அவர் பேச மாட்டார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக நேற்று நடந்த ரோடு ஷோவில் ராகுல் காந்தி பேசுகையில், "இந்தியா சுதந்திரத்தைப் பெற்றது ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளிடம் ஒப்படைப்பதற்காக அல்ல. இந்தியாவை இந்தியர்கள் அனைவரும் ஆள்வதையே விரும்புகிறோம்.

'ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே மொழி, ஒரே தலைவர்' என மோடி பேசுகிறார். அவர் அரசியல் அமைப்பை தவறாக புரிந்து வைத்திருக்கிறார். மீண்டும் பிரதமர் மோடி நீருக்குள் சென்றாலும் 'ஒலிம்பிக்கை நடத்துவோம், நிலவுக்கு மனிதனை அனுப்புவோம்' என்பார். ஒருகட்டத்தில் அவரே ராக்கெட்டில் ஏறி நிலாவுக்கு போய்விட்டு சாதித்துவிட்டதாக கூறுவார்" என்றார்.


Bala - chennai, இந்தியா
17-ஏப்-2024 03:14 Report Abuse
Bala ராவுளுக்கு ஜன்னி கண்டுவிட்டது
R.MURALIKRISHNAN - COIMBATORE, இந்தியா
16-ஏப்-2024 23:46 Report Abuse
R.MURALIKRISHNAN வடக்கிலிருந்து ஓடி ஓடி தெற்கு வந்த பப்பு பாய் இங்கிருந்து ஓடி ஓடி எங்கு போய் நிற்க போகிறீர்.ஓ...... இத்தாலியிலா
Duruvesan - Dharmapuri, இந்தியா
16-ஏப்-2024 21:11 Report Abuse
Duruvesan உண்மை, என்னோட stocks எல்லா மேல போயிடுச்சி, எனக்கு second income உண்டாச்சி,2014 இவனுங்க போகும் போது sensex 25000 இப்போ 75000 நன்றி பைனான்ஸ் மினிஸ்டர்
J.V. Iyer - Singapore, சிங்கப்பூர்
16-ஏப்-2024 20:30 Report Abuse
J.V. Iyer ஏன் இப்படி பிதற்ற ஆரம்பித்துவிட்டீர்கள்? உங்கள் காங்கிரஸ் பத்து இடங்களிலாவது வெற்றி பெறுமா? இதைப்பற்றி கவலைப்படுங்கள். ஆட்சிக்குவந்தால் எப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் கொடுக்கமுடியும் என்று யோசியுங்கள். உங்கள் ப.சி. அல்லவா யோசனை கூறி உள்ளார்? பாகிஸ்தானிடமிருந்து நோட்டு அடிக்கும் இயந்திரத்தை திரும்ப விலைக்கு வாங்கி அடிக்கவேண்டியது தான். இதுக்குமேல பப்புவுக்கும் சிந்திக்கும் ஆற்றல் கிடையாது. தோஷா, வடா...
J.V. Iyer - Singapore, சிங்கப்பூர்
16-ஏப்-2024 20:24 Report Abuse
J.V. Iyer அந்த தோஷா, படா கதை என்ன, அதை முதலில் சரியாக சொல்லுங்கள் பாப்பு.
என்றும் இந்தியன் - Kolkata, இந்தியா
16-ஏப்-2024 16:49 Report Abuse
என்றும் இந்தியன் மோடியிடம் இருப்பது இரண்டே யோசனைகள் தான்: ராகுல் விமர்சனம். 1) இந்தியாவிற்கு நல்லது செய்வது 2) இந்திய மக்களுக்கு நல்லது செய்வது.
Balasubramanian - Bangalore, இந்தியா
16-ஏப்-2024 16:41 Report Abuse
Balasubramanian மோடி ஜியின் பேச்சைக் கேட்பவர் அவருக்கு ஓட்டு போடுகின்றனர் அதை கேட்க இயலாது போனவர்கள், ராகுல் ஜி பேசி கேட்டு விட்டால், வேறு வழியின்றி மோடிஜிக்கே ஓட்டு போடுகின்றனர்
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்