பா.ஜ., தமிழக பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலருமான சி.டி.ரவி போடி தொகுதியில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.,க்கு ஓட்டு சேகரித்து, தன்னுடைய ஒக்கலிக கவுடர் இனப் பெரியோர்களிடம் பேசினார்.'ஊராட்சி தலைவர்களே, 'பந்தா' செய்யும் சூழலில், முதல்வர், துணை முதல்வர், கட்சியின் தலைவர் என்ற உயரிய பதவிகளை வகித்தாலும் எளிமையின் உருவமாக திகழும் ஓ.பி.எஸ்.,சை வியந்து பார்க்கிறேன்.'சுப நிகழ்ச்சிகளில், பூ, இலை, பழம் ஆகிய, மூன்றும் இடம் பெற்றிருக்கும். அதுபோல, தற்போது இரட்டை இலை, தாமரைப்பூ, மாம்பழம் ஆகிய, மூன்று சின்னங்களையும் பெற்றிருப்பதால் இது அழகிய கூட்டணி' என்றார். 'நல்லவேளை, 'டங்கு சிலிப்' ஆகலை' என்றார் ஒரு கூட்டணிக் கட்சி நிர்வாகி.
வாசகர் கருத்து