கருப்பு கண்ணாடி ஏன்? அமைச்சர் வேலு விளக்கம்

கோவையில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ராஜ்குமாரை ஆதரித்து, மசக்காளிபாளையம் மைதானத்தில், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு பங்கேற்று, சிறப்புரை ஆற்றினார். அவர், கருப்பு கண்ணாடி அணிந்து, மேடையில் அமர்ந்திருந்தார்.

அமைச்சர் வேலு, நிகழ்ச்சியில் பேசியபோது, ''கருப்பு கண்ணாடி அணிந்திருப்பது ஏன் என மேடையில் இருப்பவர்கள் பலரும் கேட்டனர். இரவு நேரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த சமயத்தில், ஒரு கண்ணில் பூச்சி பட்டது. அதனால், விளக்கு வெளிச்சங்களை நேரடியாக பார்க்க முடியாத சூழல். மருத்துவர்கள் ஆலோசனைப்படி, கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு தோன்றுகிறேன். கருப்பு கண்ணாடியை கருணாநிதி அணிவார்; அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனாலும், கருப்பு கண்ணாடி அணிந்திருக்கிறேன்,'' என்றார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்