திருப்பூர் வடக்கு இந்திய கம்யூ., வேட்பாளர் ரவிக்கு ஆதரவு கேட்டு, அக்கட்சியை சேர்ந்த பனியன் தொழிலாளர்கள் வீதி வீதியாக சென்றனர்; பணி முடிந்து திரும்பிய பெண் தொழிலாளர்கள் உட்பட, கட்சியினர் சிலரும், கூட்டணி கட்சிகளின் கொடிகளை ஏந்தியவாறு பவனி வந்தனர்.வாக்காளர்களை சந்தித்து, ஆதரவு கேட்பதற்கு பதிலாக, 'வாக்களிப்போம்... வாக்களிப்போம்... கதிர் அரிவாளுக்கு வாக்களிப்போம்' என்று கோஷமிட்டவாறு சென்றனர்.'தோழர்னாலே ஆர்ப்பாட்டம், கோஷம் வழக்கமானது தான். பழக்க தோஷத்துல, ஓட்டு கேக்கறப்பவும், கோஷம் போடறாங்க' என்று, ரோட்டில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், 'கமென்ட்' அடித்தவுடன், கூடியிருந்தவர்கள் 'கலகல'வென சிரித்தனர்.
வாசகர் கருத்து