Advertisement

குளித்தலையில் ரிங் சாலை அமைக்க முதல்வருக்கு மனு

குளித்தலை : குளித்தலையில் ரிங் சாலை அமைக்க விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ஜெயராமன் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார்.

தமிழக முதல்வர், எம்.எல்.ஏ., மாணிக்கம், நகராட்சி தலைவர் சகுந்தலா, கலெக்டர் தங்கவேல் ஆகியோருக்கு குளித்தலை, காவிரி படுகை விவசாயிகள் கூட்டடைப்பு தலைவர் ஜெயராமன் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:குளித்தலை, மணப்பாறை நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படவுள்ளது. மேலும், சுங்ககேட்டில் இருந்து ரயில் நிலையம், பெரியபாலம், பெரியார் நகர் வழியாக பொது மக்கள், விவசாயிகள் சென்று பயன்பெறும் வகையில் ரிங் சாலை அமைத்தால், குளித்தலை நகர பகுதியில் போக்குவரத்து தடை ஏற்படாது.

பொது மக்களும் பாதுகாப்புடன் பயணம் செய்ய ஏதுவாக அமையும். குளித்தலை நகர பகுதியில் ரிங் சாலை அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்