கூடலுார், குன்னுார் தொகுதிகள், மலைப்பாங்கான பகுதியில், தொலைதுாரங்களில் இருப்பதால், ஹெலிகாப்டரில் வந்தார், முதல்வர். ஆனால், ஸ்டாலின் நீலகிரி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. கோவை மாவட்ட எல்லையில் உள்ள மேட்டுப்பாளையம் வந்து, மலை மாவட்டத்துக்கும் சேர்த்து, 'கும்பிடு' போட்டு சென்று விட்டார்.
மேட்டுப்பாளையத்தில் ஸ்டாலின் பேசுகையில், 'நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது, முதல்வர் ஹெலிகாப்டரில் வந்து பார்க்கவில்லை. ஆனால், தேர்தல் பிரசாரத்துக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்' என, கிண்டல் அடித்தார். இந்த பேச்சு, அ.தி.மு.க.,வினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 'கடந்த, 2009ம் ஆண்டு நிலச்சரிவின் போது, அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி இங்கே எட்டிக்கூட பார்க்கவில்லை. அதையும் ஸ்டாலின் சேர்த்து சொல்லியிருக்கலாம்' என்றனர்.
வாசகர் கருத்து