திருச்சி தொகுதியில் ராதா நிரஞ்சனி?

தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீராங்கனையும், புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவருமான ராதா நிரஞ்சனியை, திருச்சி தொகுதியில் நிறுத்த பா.ஜ., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ராதா நிரஞ்சனி, 34, மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். இவரது தாயார் சாருபாலா, இருமுறை திருச்சி மேயராக இருந்தவர். 2009ல் ஐயாயிரத்திற்கும் குறைவான ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். ராதாவும், 2019ல் அ.ம.மு.க., சார்பில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகளைப் பெற்றவர்.

ஏற்கனவே அத்தொகுதியில், திருச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயகர்ணா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ராதா நிரஞ்சனி யின் வருகை கட்சிக்குள்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


jayvee - chennai, இந்தியா
09-மார்-2024 17:51 Report Abuse
jayvee இவர்கள் குடும்பமே அரசியல் நாடோடிகள்
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்