மறுத்த மாவட்ட செயலர் 'சிக்னல்' கொடுத்த தலைமை

லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்த தி.மு.க., மாவட்ட செயலருக்கு இப்போது யோகம் அடித்துள்ளது. தேர்தலுக்குத் தயாராக இருக்கும்படி கட்சித் தலைமை அவருக்கு 'சிக்னல்' காட்டியுள்ளது.

சேலம் தி.மு.க, கிழக்கு மாவட்ட செயலராக இருப்பவர் சிவலிங்கம். இருமுறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். கடந்த லோக்சபா தேர்தல் நேரத்தில், இனி தேர்தலில் நிற்க விருப்பம் இல்லை என அறிவித்தார். அதையடுத்து அவருக்கு கட்சியின் மாவட்ட செயலர் பதவி தேடி வந்தது.

கள்ளக்குறிச்சியின் தற்போதைய எம்.பி., கவுதம சிகாமணி, அமலாக்கத் துறையின் வழக்கில் சிக்கியிருப்பதால் அவருக்கு மீண்டும் 'சீட்' கொடுக்க தி.மு.க., தலைமை விரும்பவில்லை. எனினும், மீண்டும் அங்கேயே போட்டியிட அவரும் விருப்ப மனு அளித்துள்ளார்.

அதேநேரம், சிவலிங்கத்தைத் தயாராக இருக்கும்படி கட்சித் தலைமை தகவல் அனுப்பி உள்ளது. அதையடுத்து, மனம் மாறிய சிவலிங்கம், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு விருப்ப மனு அளித்து விட்டு, 12 லட்சம் ரூபாய் செலவில் பிரசார வேனையும் தயார் செய்து வருகிறார். கூட்டணிக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை என்றால், அவருக்குத்தான் சீட் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்