Advertisement

கரூர் ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

கரூர் : கரூர், தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் அமைந்துள்ள, ஓட்டு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவர் கூறியதாவது: கரூர் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்., 19ல் நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் உள்ள, பாதுகாப்பு அறையில் வைத்து துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடச்சந்துார், மணப்பாறை மற்றும் விராலிமலை ஆகிய, ஆறு சட்டசபை தொகுதிகளுக்கு முதல் தளம், இரண்டாம் தளம் மற்றும் மூன்றாம் தளங்களில் ஓட்டு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஓட்டு எண்ணிக்கை ஒரு வாரம் உள்ள நிலையில், எண்ணும் அறைகளில் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார். டி.ஆர்.ஓ., கண்ணன் உடனிருந்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்