Advertisement

கரூர் மாவட்ட தி.மு.க., ஆபீஸில் செயற்குழு கூட்டம்

கரூர் : கரூரில், மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நேற்று செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன், 3ல், ஒன்றிய, நகர, டவுன் பஞ்., வார்டுகளில் சார்பு அணிகள் சார்பில், அவரது படத்துக்கு மாலை அணிவித்து, கொடியேற்றி இனிப்பு வழங்கிட வேண்டும். மேலும் மக்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தொண்டர்களின் இல்லங்களின் முன், கோலமிட்டு பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், கரூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அப்துல்லா, எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்