ராகுல் படம் இல்லை கூட்டத்தை புறக்கணித்த காங்.,

திண்டுக்கல்லில் மா.கம்யூ., வேட்பாளர்சச்சிதானந்தத்தை ஆதரித்து, அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி பங்கேற்ற கூட்டம் நடந்தது.

அழைப்பிதழில் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களான முதல்வர் ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலரது படங்கள் இடம் பெற்றன. ஆனால், காங்., முன்னாள் தலைவர் ராகுல் படம் மட்டும் இல்லை.

இது, திண்டுக்கல் காங்., நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், அக்கூட்டத்தை திண்டுக்கல் காங்., நகர் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் புறக்கணித்தனர்.

அவர்கள் கூறியதாவது:

திண்டுக்கல்லில் தேர்தல் பணிகளில் மா.கம்யூ., கட்சியினர், காங்., கட்சியினரை புறக்கணித்து வருகின்றனர். தற்போது எங்கள் அதிருப்தியை பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல் காட்டி உள்ளோம்.

காங்., கூட்டணியில் இருப்பதால் வேறு வழியின்றி மனமில்லாமல் தேர்தல் பிரசாரத்தில் அரைகுறையாக ஈடுபட்டு வருகிறோம். காங்., தேர்தல் அறிக்கைகளை வைத்து பிரசாரம் செய்கின்றனர். ஆனால், ராகுல் படத்தை புறக்கணிக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்