எங்கள் காதுகள் பாவமில்லையா : மோடியை விமர்சித்த ஸ்டாலின்

"கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ., அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு" என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ., அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு. இதில் 2 கூறுகள் உள்ளன:

முதலாவது, மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.

இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பா.ஜ., அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழகத்துக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே.

அடுத்து, மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு.

இதில் பா.ஜ., காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?

இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி,

ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி,

சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று ஒட்டுமொத்த தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பா.ஜ., அரசு.

இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பா.ஜ., அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா?

இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் இது தான்.

தங்களுடைய உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல பா.ஜ., அரசு கூறிக்கொள்கிறது. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும். எங்கள் காதுகள் பாவமில்லையா?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Apposthalan samlin - sulaymaniyah, ஈராக்
15-ஏப்-2024 11:18 Report Abuse
Apposthalan samlin மத்தியில் உள்ள பிஜேபி இந்த மாதிரி பொய் சொல்லலாமா சமூக வலை தளங்களில் எல்லாம் சுடுகிறது அதனால் தான் பிஜேபி கு ஆதரவு தமிழ் நாட்டில் இல்லை . 28 பைசா என்று தொட்டி பட்டி எல்லாம் தெரிந்து உள்ளது .உத்தர பிரதேஷ் கு மட்டும் ஏன் அள்ளி கொடுக்க வேண்டும் ? மற்ற மாநிலங்கள் இளிச்ச வாயர்களா ?
J.V. Iyer - Singapore, சிங்கப்பூர்
15-ஏப்-2024 06:10 Report Abuse
J.V. Iyer நீங்கள் என்றைக்கு தமிழ் நாட்டு நிலவரம் நேராக தெரிந்துகொண்டீர்கள்? எழுதி கொடுத்ததை படிக்க ஒரு முதல்வர் தேவையா?
Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
15-ஏப்-2024 05:54 Report Abuse
Kasimani Baskaran சலிக்காமல் பொய் சொல்வது திராவிட மரபு. ஆளாளுக்கு ஒரு தொகையை சொல்வது - இவர்கள் புளுகுகிறார்கள் என்பதற்கான அத்தாட்சி.
Bala - chennai, இந்தியா
15-ஏப்-2024 03:06 Report Abuse
Bala தமிழக முதல்வர் சொல்வதுபோல் மத்திய அரசு அப்பிடியெல்லாம் பொதுவெளியில் பொய் சொல்லிவிட முடியாது. தவறான தகவலை தந்தால் நீதிமன்றத்தில் வழக்குகூட போட முடியும். எது எப்படியிருந்தாலும் மோடி தமிழகத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று இதுநாள்வரை கூறிவந்த நீங்கள், மேலும் go back மோடி என்றெல்லாம் சொல்லிவந்த நீங்கள் உங்கள் வாயாலேயே பாஜக தமிழகத்திற்கு கொடுத்தது 5.5 லட்சம் கோடி என்றால் தமிழக மக்களுக்காக மத்திய அரசுடன் இணக்கத்துடன் இருந்து மக்கள் நலன்மட்டுமே கருதி அதிக நிதியை பெற்று பல நல்ல திட்டங்களையும் வெள்ளத்திற்கான நிவாரணத்தையும் பெற்றிருக்கலாமே. அப்படி நல்ல செயல்களை செய்துவிட்டு தமிழக மக்களிடம் ஒட்டுக்கேட்க சென்றிருக்கலாம். 39 இடங்களையும் வென்றிருக்கலாம். அனால் இப்பொழுது யார் பொய் சொல்கிறார் என்பது தமிழக மக்களுக்கு தெரிந்து விட்டது. திமுக இந்த தேர்தலில் பல தொகுதிகளை இழக்க வேண்டி வருகிறது. பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். வாக்கு சதவீதமும் 30 சதவீதத்தை நெருங்கும்
ganesan udayakumar - LYON, பிரான்ஸ்
14-ஏப்-2024 22:49 Report Abuse
ganesan udayakumar நம்ப முதல்வர் இன்னும் கோமாவில் தான் இருக்கிறார் .
PR Makudeswaran - Madras, இந்தியா
14-ஏப்-2024 20:39 Report Abuse
PR Makudeswaran சரி வாங்கிய காசுக்கு கணக்கு கொடுத்துவிட்டு ,பின் அவர்கள் மேல் வழக்கு தொடருங்கள்.
சிவா - Jeddah, சவுதி அரேபியா
14-ஏப்-2024 20:15 Report Abuse
சிவா ரொம்ப பாவம். ஆதலால் மக்கள் யாரும் பிரச்சாரத்தில் கேள்வி கேட்காமல் வாக்களிக்கும் போது சரியான மாற்று நபருக்கு வாக்களியுங்கள் மகாஜனங்களே.
rsudarsan lic - mumbai, இந்தியா
14-ஏப்-2024 19:52 Report Abuse
rsudarsan lic இப்படியே கேட்டு கேட்டு பதில் கேள்வி கேட்டு 36000 கோடி வெளிய varappogudhu
Duruvesan - Dharmapuri, இந்தியா
14-ஏப்-2024 18:56 Report Abuse
Duruvesan மோடிக்கு ஓட்டு போட்டது எனக்கு இதை செய்யு அதை செய்யின்னு இல்லை, நான் பாத்துக்காப்பா கோயிலுக்கு போயிட்டு வரணும், பக்கிகள் வந்து குண்டு வெக்க கூடாதுன்னு தான். அப்புறம் தொப்புள் கொடி உறவை கொத்து கொத்தா கொன்னானுங்க, அது இனியும் தொடர கூடாதுன்னு, எனக்கு வேலை எவனும் குடுக்க ஓட்டு போடல. நான் படிச்சேன் எனக்கு வேலை கெடச்சது, விடியல அரசாங்க வேலை வேணாம். பாதுகாப்பா இருக்கேன் அது போதும். விடியல் ஆட்சில பாதுகாப்பு ஹிந்துக்களுக்கு இல்ல, அதனால குடும்பத்துடன் பிஜேபிக்கு ஓட்டு போடுவேன்
என்றும் இந்தியன் - Kolkata, இந்தியா
14-ஏப்-2024 18:20 Report Abuse
என்றும் இந்தியன் எங்கள் காதுகள் பாவமில்லையா????அதைத்தான் தினம் தினம் நான் கேட்கின்றேன்
மேலும் 1 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்