தே.மு.தி.க., 'கவனிப்பால்' அ.தி.மு.க., -உற்சாகம்

திருவள்ளூர் தனி தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணி தே.மு.தி.க., வேட்பாளர் நல்லதம்பி போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, நேற்று முன்தினம் மாதவரத்திற்கு பிரசாரம் செய்ய வந்தார்.

பிரேமலதாவை வரவேற்பதற்காக, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் மாதவரம் மூர்த்தி, சிறுணியம் பலராமன் ஆகியோர்தடபுடல் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கூட்டத்தில் பங்கேற்க 2,000 பேர், பூக்கள், கட்சி கொடி, தோரணம் என நடந்த ஏற்பாடுகளை பார்த்து, தி.மு.க.,வினரே மிரண்டு போயினர்.

தே.மு.தி.க., மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பிரமிப்பு ஏற்படுத்தும் வகையில் பிரேமலதாவின் பிரசாரம் இருக்க வேண்டும் என, சொல்லியே ஏற்பாடு செய்துள்ளனர்.

இதற்காக, அ.தி.மு.க.,வின் இரு மாவட்ட செயலர்களுக்கும் தலா 8 லட்சம் ரூபாய் என, தே.மு.தி.க., சார்பில் பணம் வழங்கப்பட்டுள்ளதாக, தே.மு.தி.க.,வினர் கூறினர். அதனாலேயே இவ்வளவு பெரிய ஏற்பாடு செய்ததாகவும், அக்கட்சி நிர்வாகிகள் கூறினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்