சுட்டெரிக்கும் வெயில்: தவிர்க்கும் டி.ஆர்.பாலு

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை, குன்றத்துார் அருகே கொல்லச்சேரியில் காலை 6:30 மணிக்கு பிரசாரத்தை துவக்கினார்.

காலையிலேயே வெயில் கொளுத்த துவங்கியதால், குன்றத்துார் - குமணன்சாவடி நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சிக்கராயபுரம், கொழுமணிவாக்கம் ஊராட்சிகளுக்குள் செல்லவில்லை.

நெடுஞ்சாலையில் இருந்து ஊருக்கு பிரிந்து செல்லும் சாலை ஓரத்தில் நின்று, அங்கிருந்த சொற்ப நிர்வாகிகளிடம் ஓட்டு சேகரித்து விட்டு புறப்பட்டார்.

தி.மு.க.,வினர் கூறுகையில், 'டி.ஆர்.பாலுவுக்கு வெயில் ஒத்துவராது; சீக்கிரமே சோர்வாகி விடுவார். அதனால், வெயிலில் இருந்து தப்பிக்க, காலையில் அதிவேக பிரசாரம் செய்கிறார்.

'ஊராட்சிகளின் தெருக்கள் வழியாக பிரசார வாகனம் செல்வதில்லை. நெடுஞ்சாலை வழியே விரைந்து சென்று, முக்கிய இடத்தில் மட்டும் ஐந்து முதல் 10 நிமிடங்கள் நின்று, அங்குள்ள கட்சி நிர்வாகிகளிடம் ஓட்டு சேகரித்து சென்று விடுவார்' என்றனர்.


panneer selvam - Dubai, ஐக்கிய அரபு நாடுகள்
06-ஏப்-2024 15:45 Report Abuse
panneer selvam t.r.balu himself acknowledged how to win election in tamilnadu and hence he will not come out in daytime
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)