கூவத்துாரை பற்றி கேள்வி கேட்டதால் கருணாஸ் 'அப்செட்'

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ், பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில், கொடிக்குளம், கொட்டகுடி, அக்கிரமேசி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அக்கிரமேசியில் பேசியதாவது:

ஜெயலலிதா இருந்த போது மோடியா, லேடியா எனக் கேட்டார். ஒரு பெண்ணுக்கு இருந்த தைரியம் இப்போதுள்ள பழனிசாமிக்கு உள்ளதா? நானெல்லாம் ஓட்டு போட்டு தான் அவரை முதல்வராக்கினோம். அன்றைக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம், மற்ற அமைச்சர்களும் இருந்தனர் என பேசிக் கொண்டு இருந்தார்.

திடீரென அங்கிருந்த ஒரு இளைஞர், 'கூவத்துாரில் நீங்களும் தானே பழனிசாமிக்கு ஓட்டு போட்டீர்கள்' என்றார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பின் 'கூவத்துாரில் 127 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளித்தது பழனிசாமிக்காக அல்ல; சசிகலாவுக்காகத் தான். இதை இல்லை என்று கூற பழனிசாமி தயாரா' என்று பேசினார்.

தொடர்ந்து சசிகலா மற்றும் ஜெயலலிதா குறித்தே கருணாஸ் பேசிய தால், தி.மு.க., கூட்டணி கட்சியினர் கையைபிசைந்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்