சீமான் பவுன்சர்கள் கொடுத்த 'பஞ்ச்'

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டாலும், தங்கள் ஆட்சியில் விசுவாசமாக பணியாற்றி ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்.ஐ.,க்களை தேடி கண்டுபிடித்து 'பவுன்சர்களாக' நியமித்துள்ளனர்.

அதேபோல் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அவரது தம்பிமார்களே 'பவுன்சர்களாக' இருந்து அவரை பாதுகாத்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலுார் பகுதியில் சீமான் பிரசாரம் செய்த போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஆர்வ மிகுதியில் குத்தாட்டம் போட்டார். அவரை பவுன்சர்கள் தடுத்தனர். ஆனாலும் அந்த நபர் விடாமல் ஆடிக்கொண்டிருந்தார்.

இதனால் டென்ஷனான பவுன்சர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அப்போதும் அந்த நபர் ஆட, கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற பவுன்சர்கள் அவரை அடித்து நாலு ஊமை குத்து குத்தி அனுப்பினர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்