எம்.எல்.ஏ., பிரசாரம் விரட்டிய பொதுமக்கள்

திருவள்ளூர் லோக்சபா தொகுதி தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் சசிகாந்த் செந்தில் நேற்று முன்தினம் இரவு உளுந்தை கிராமத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் கட்சியினருடன் ஓட்டு சேகரித்தார்.

அதில், எம்.எல்.ஏ., பேச ஆரம்பித்தபோது, 'தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை? எப்படி ஓட்டு கேட்டு வருகிறீர்கள்?' என பகுதிவாசிகள் கோபத்துடன் கேட்டனர்.

உடனே, 'இந்த சாலை நான் போட்டது; அந்த தொட்டி நான் கட்டியது' என, ராஜேந்திரன் பேசத் துவங்கினார். மேலும் வாக்காளர்களை, வாய்யா, போய்யா என ஒருமையிலும் பேசினார்.

கடுப்பான பகுதிவாசிகள், மேலும் பல கேள்விகளை கேட்கத் துவங்கியதும், பிரசாரக் குழுவினர் அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்று விட்டனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்