பழனிசாமி பிரசாரத்தில் ஓங்கி ஒலிக்கும் கோஷம்

அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சி பொதுச் செயலர் பழனிசாமி, லோக்சபா தொகுதி வாரியாக நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் அந்த தொகுதிக்கு, அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு, தி.மு.க., ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்பதை எடுத்துரைக்கிறார்.

அனைத்து கூட்டங்களிலும், தன் பேச்சை முடிப்பதற்கு முன்பாக, 'தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாடு காப்போம்; ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்; தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்' என, பழனிசாமி உரக்க கூறுகிறார். அதை கூட்டத்திற்கு வந்தவர்களையும் திரும்ப சொல்லும்படி கூறுகிறார். கட்சியினரும் ஆர்வத்துடன் குரல் எழுப்புகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்