தன் கட்சியை தானே திட்டிய வேட்பாளர்

கன்னியாகுமரி அ.தி.மு.க., வேட்பாளர், 'பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் ஒரே மாதிரியான செயல்பாடுகள், கொள்கைகளுடன் மக்களை சீரழித்து வருகின்றன' எனக் கூறியதால், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கட்சி மாறிய பலருக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட கட்சிகள் வாய்ப்பளித்துஉள்ளன. அவர்கள் பழைய ஞாபகத்தில் பேசி, அதிர்வலைகளை ஏற்படுத்தி விடுகின்றனர்.

அந்த வகையில், தி.மு.க., மீனவர் அணி துணைச் செயலராக இருந்த பசிலியான் நசரேத், நான்கு மாதங்களுக்கு முன்பு, அ.தி.மு.க.,வில் இணைந்தார். அவருக்கு கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட, அ.தி.மு.க., தலைமை வாய்ப்பு அளித்துள்ளது.

அவர் இரு தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அத்துடன் நிற்காமல் பா.ஜ.,வை கடுமையாக சாடினார்.

அப்போது கவனக்குறைவாக, பழைய ஞாபகத்தில், 'அ.தி.மு.க.,வும் பா.ஜ.,வும் ஒரே மாதிரியான செயல்பாடுகள், கொள்கைகளுடன் மக்களை சீரழித்து வருகின்றன' எனக் கூறி, அருகிலிருந்த அ.தி.மு.க.,வினரை மயக்கம் அடையச் செய்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்