தேர்தலில் ஏன் போட்டி : தங்கர்பச்சான் விளக்கம்

''தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,-பா.ம.க., கூட்டணி வெற்றி பெறும்'' என இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்தார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இன்று மாநிலம் முழுவதும் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், கடலூரில் பா.ம.க., சார்பில் போட்டியிடும் சினிமா இயக்குநர் தங்கர்பச்சான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களின் துயரம் யாருக்கும் புரிவதில்லை. எப்போது இயற்கை பேரிடர் வரும் என்ற அச்சத்தில் கடலூர் மக்கள் உள்ளனர். இந்த நிலை தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லை. இங்குள்ள, விவசாயிகளின் பிரச்னையை சரி செய்வேன். விளைநிலங்களை காப்பாற்றவே நான் அரசியலில் இறங்கியுள்ளேன். தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,-பா.ம.க., கூட்டணி மாபெறும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்