''ஊருக்கு ஒரு அடிப்படை வசதியே இல்லாத பகுதியை, அத்திப்பட்டு கிராமம் போல், ஓட்டுக்கு காசு வாங்கும் பகுதியாகவே வைத்துள்ளனர்,'' என்கிறார், சைதாப்பேட்டை தொகுதி மய்யவேட்பாளர் சினேகா மோகன்தாஸ்.
அவரது பேட்டி: சென்னையில், சைதாப்பேட்டை தொகுதியில், 10க்கும் மேற்பட்ட பகுதிகளில், அடிப்படை வசதியே இல்லை. அத்திப்பட்டு கிராமம் போல் வைத்துள்ளனர். ஒவ்வொன்றிலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடந்த, 50 ஆண்டுகளாக, இரண்டு திராவிட கட்சிகளும், இதுபோன்ற பகுதி மக்களை, ஓட்டுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் சிலர், இன்னும் ஜெயலலிதா உயிருடன் இருப்பதாகவே கருதுகின்றனர். 20 சதவீதம் படித்தவர்களும், அதில் உள்ளனர். அவர்களிடம் பேசி புரிய வைத்து வருகிறோம். மாற்றத்திற்கானஇந்த நேரத்தை, மக்கள் தவறவிடக்கூடாது. இவ்வாறு, சினேகா கூறினார்.
வாசகர் கருத்து