கனிமொழிக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்

துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் எம்.பி., கனிமொழிக்கு எதிராக விவசாயிகள் சங்கம் களம் இறங்கி உள்ளது.

இதுதொடர்பாக தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி, நேற்று துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு நிர்வாகிகளுடன் வந்து வேட்பு மனுவை பெற்றுச் சென்றார்.

அவர் அளித்த பேட்டி:

செய்யாறில் தங்கள் நிலத்தை பாதுகாப்பதற்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சியது தி.மு.க., அரசு. மேலும், பயிர் காப்பீடு தொகை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. மழை, வெள்ள பாதிப்பின் போது நிவாரணங்களும் விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

விவசாயிகள் பிரச்னைகள் குறித்து எம்.பி., கனிமொழி லோக்சபாவில் பேசவில்லை. இதுதொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட, தமிழ் விவசாயிகள் சங்கம் துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

துாத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு பெற்றுச் சென்ற தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்