தி.மு.க.,வுக்கு எதிராக பெண்களை திரட்ட அ.தி.மு.க., 'ஸ்பெஷல் அசைன்மென்ட்'

கட்சி தலைமையின் உத்தரவை ஏற்று, அ.தி.மு.க., நிர்வாகிகள் குழுவினர், திருப்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று, திண்ணை பிரசாரத்தை துவக்கியுள்ளனர்.

பட்டியலுடன் சென்று, நேரில் உள்ள வாக்காளர் விபரத்தை குறித்துக் கொள்கின்றனர். வெளிமாவட்ட மக்கள் அதிகம் வசிக்கும் திருப்பூரில், தொழில் நிமித்தமாக, அடிக்கடி குடிபெயர்ந்து செல்லும் நிலை உள்ளது. இடம்பெயர்ந்த வாக்காளர் விபரத்தை கேட்டு, அவர்களை கண்டறிந்து, கட்சிக்கு ஆதரவு திரட்ட, 'ஸ்பெஷல் அசைன்மென்ட்' வழங்கப்பட்டுள்ளது.

'வாட்ஸாப்' குழு

வெளியூர் சென்றிருந்தாலும் சரி; வேறு வார்டுகளில் இருந்தாலும் சரி; அவர்களை நேரில் சந்தித்து, ஆதரவு திரட்டி வருகின்றனர்.

மறவாமல், அவர்களது, 'மொபைல்' எண்களையும் பெற்றுக்கொண்டு, 'பூத்' வாரியாக உருவாக்கப்படும், 'வாட்ஸாப்' குழுக்களில் இணைத்துக் கொள்கின்றனர்.

குறிப்பாக, திருப்பூர் தெற்கு தொகுதியில், அ.தி.மு.க., உறுப்பினர் மற்றும் அபிமானிகளை கொண்ட, தனி 'வாட்ஸாப்' தேர்தல் குழுக்கள் உருவாக்கப்பட்டு, மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர், முதியோர் ஓய்வூதியம் கிடைக்காதது, அ.தி.மு.க., திட்டங்களை முடக்கியது என, பெண்களின் கோபத்தை துாண்டும் வகையில், தினமும் தகவல்களை பரிமாறவும்உத்தரவிடப்பட்டுள்ளது.

நேரடி பிரசாரம்

'பூத்' வாரியாக, நான்கு பெண்கள் வீடு வீடாக சென்று, விலைவாசி உயர்வு குறித்து பெண்களிடம் பேசி, தி.மு.க., அரசுக்கு எதிராக மனநிலையை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் தற்போது திருப்பூர் தொகுதியில் ஓட்டுரிமை இருந்து மதுரை, நெல்லை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு மாறியிருப்போரையும் நேரில் சென்று பார்த்து, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட வைக்கவும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்