ஓ.பி.எஸ்., வெற்றிக்கு காப்பு கட்டிய மகன்

தேனி மாவட்டம், பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆன்மிக வாரிசாக வலம் வரும் இளைய மகன் ஜெயபிரதீப் பங்கேற்றார். முன்னதாக கோவில் அருகே ஓடும் வராக நதியில் குளித்து சிறப்பு பூஜையில் பங்கேற்றார். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு அமைப்பை துவங்கிய தன் தந்தை அரசியலில் மீண்டும் பிரகாசிக்கவும், கட்சியை மீட்டெடுக்க மேற்கொண்டுள்ள சட்டப் போராட்டங்களில் வெற்றி பெறவும், லோக்சபா தேர்தல் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற வேண்டி ஓ.பி.எஸ்.,பெயரில் அர்ச்சனை செய்தார்.

பின் கையில் காப்பு கட்டி, ஒன்பது நாள் விரதத்தை துவக்கினார். அரசியலில் தந்தைக்கு இக்கட்டான சூழ்நிலை வரும் போதெல்லாம் அவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டு கேரளாவில் பரிகார பூஜைகள் செய்வது, பிரசித்தி பெற்ற கோவில்களில் பிரதோஷம், பவுர்ணமி பூஜை நடத்துவது இவரது வழக்கம்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்