மயிலாடுதுறையில் ராகுல் நண்பர்?

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 10 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியானது. இதில், தற்போது மயிலாடுதுறை தி.மு.க., - எம்.பி.,யாக உள்ள ராமலிங்கம் மீது தொகுதி மக்கள், கட்சியினர் மத்தியில் பல்வேறு அதிருப்தியில் இருப்பதால், தி.மு.க., தலைமை மயிலாடுதுறை தொகுதியை காங்.,க்கு தள்ளிவிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சமீபத்தில் மயிலாடுதுறையில் காங்., போட்டியிடுவது 100 சதவீதம் உறுதி என பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இத்தொகுதியில் மூன்று முறை வெற்றிபெற்ற மணிசங்கர் அய்யர், மீண்டும் இதே தொகுதியில் தனக்கு அல்லது தன் மகளுக்கு 'சீட்' வேண்டும் என கட்சித் தலைமையிடம் அடம் பிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் சீட்டுக்கு மல்லுக்கட்டி வருகின்றனர்.

இதற்கிடையே தன் நெருங்கிய நண்பரும், காங்.,கின் அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸின்(ஏ.ஐ.பி.சி.,) தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தியை மயிலாடுதுறையில் நிறுத்த ராகுல் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை பேசியதாகவும் கூறப்படுகிறது.

பிரவீன் சக்கரவர்த்தி, 2018ல் காங்.,கில் சேர்ந்தார். கட்சியின் தரவு பகுப்பாய்வு துறையின் தலைவராக அவரை ராகுல் நியமித்தார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்