Advertisement

நாளை ஓட்டு எண்ணிக்கை மதுரையில் 5 கட்ட பாதுகாப்பு

மதுரை: மதுரை லோக்சபா தொகுதி ஓட்டுகள் நாளை எண்ணப்படுவதையொட்டி, மருத்துவக்கல்லுாரி பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை தொகுதிக்கான ஓட்டுகள் மதுரை மருத்துவக் கல்லுாரி மையத்தில் எண்ணப்பட உள்ளது. தேர்தல் முடிந்ததும் அங்கு ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வளாகம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. வேட்பாளர்களின் ஏஜென்டுகளும் சுழற்சி முறையில் மருத்துவக்கல்லுாரியில் இருந்து கண்காணிக்கின்றனர். நாளை (ஜூன் 4) காலை 7:00 மணிக்கு ஓட்டுகள் எண்ணும் பணி காலையில் திட்டமிட்ட நேரத்தில் தொடங்க இருக்கிறது. இதையொட்டி, போலீஸ் கமிஷனர் லோகநாதன் மேற்பார்வையில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 1500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் அறை (ஸ்ட்ராங் ரூம்), ஓட்டுகள் எண்ணும் அறை, இவ்வறைகளின் வெளிப்பகுதிகள், மருத்துவக் கல்லுாரி நுழைவு வாயில்கள், இதில் இருந்து குறிப்பிட்ட தொலைவு வரை என ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. வெளியூர்களில் இருந்தும் கூடுதலாக பட்டாலியன், ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்