அண்ணாமலையே முடிவு செய்வார் : சரத்குமார்

"தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்க வேண்டும்" என, நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று பா.ஜ.,சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பங்கேற்ற நடிகர் சரத்குமார் கூறியதாவது:

பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது, ஒரு பத்திரிகையாளராக அவரை சந்தித்தேன். நாட்டை ஒருமைப்படுத்த வேண்டும் என அப்போது அவரிடம் இருந்த உத்வேகம், இன்றும் அவரிடம் தொடர்கிறது.

பிரதமரிடம், உங்களுடன் இணைந்து செயல்டுகின்ற வாய்ப்பு கிடைத்தற்கு நன்றி என தெரிவித்தேன். தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து மாநில தலைவர் அண்ணாமலையிடம் தான் கேட்க வேண்டும்.

முன்பு கூட்டணி தலைவராக பேசியது வேறு, இப்போது மாநில தலைவர் அண்ணாமலை என்ன சொல்கிறாரோ, அதைத் தான் கேட்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்