வகுப்புவாத பிடியில் இருந்து நாட்டை மீட்போம்: ஸ்டாலின்

"பா.ஜ.,வின் வகுப்புவாத பிடியில் இருந்து நாட்டை மீட்க ஒன்றிணைவோம்" என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

கடந்த 2014 முதல், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.,வின் ஆட்சி இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை கிழித்தெறிந்து விட்டு, சகிப்பின்மையை வளர்த்து விட்டது.முஸ்லிம் சமுகத்திற்கு எதிரான பாகுபாட்டை அதிகரித்து வருகிறது.

சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி முஸ்லிம்கள் மீதான வெறுப்பை சட்டப்பூர்வமாக்கி வருகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பிற்கு போராடும் இந் நாளில், நம் நாட்டை பா.ஜ.,வின் வகுப்புவாத பிடியில் இருந்து மீட்க ஒன்றுபடுவோம்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


VIDHURAN - chennai, இந்தியா
20-மார்-2024 20:53 Report Abuse
VIDHURAN வகுப்பு வாத பிடியிலிருந்து,.......? நீங்க (திமுக)..........? மீட்க போகிறீறீங்க ம்.............. கஷ்ட காலம் நீங்கல்லாம் கொஞ்சம் நேராக இருந்தால், இந்த மாதிரி வகுப்பு வாத மீட்பிற்கு தேவையே இருந்து இருக்காது
sugumar s - CHENNAI, இந்தியா
20-மார்-2024 15:00 Report Abuse
sugumar s If DM comes to power, it may lead to problems to Hindus and others will develope. people should be careful
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்