Advertisement

பிரதமர் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய திமுக மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

நாகர்கோவில்: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.



பிரதமர் மோடி நாளை( மே 30) மாலை 4: 35 மணிக்கு கன்னியாகுமரி வந்து விவேகானந்தர் பாறையில் தியானத்தை துவங்குகிறார். ஜூன் 1 அங்கிருந்து கிளம்புகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



இந்நிலையில், இந்த தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி, மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளது. அதில், பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்வது தேர்தல் விதிமீறல். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், தியானத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்