திண்டுக்கல்லில் அ.தி.மு.க., உற்சாகம்

கடந்த முறையைப் போல, திண்டுக்கல்லில் தி.மு.க., போட்டியிடும் எனக் கணக்கு போட்டு, அ.தி.மு.க.,வில் சீட் கேட்க பலரும் தயங்கினர்.

இப்போது சீன் மாறி விட்டது. போட்டியிடப் போவது மா.கம்யூ., தான் என்பதால் அ.தி.மு.க., முகாமில் புது உற்சாகம் கிளம்பி ஆளாளுக்கு சீட் கேட்கின்றனர்.

முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மகன் சதீஷ், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மைத்துனர் கண்ணன் ஆகியோர் கேட்கின்றனர். இதனிடையே கூட்டணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ.,க்கு திண்டுக்கல்லை ஒதுக்கி விடலாம் எனவும் தலைமை கருதுகிறது.

அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:

மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகள் தி.மு.க., கைவசம் உள்ளன. இரண்டு முக்கிய அமைச்சர்கள் வேறு உள்ளனர். இதனால் தி.மு.க., தான் போட்டியிடும் என்று உறுதியாக நம்பப்பட்டது. திடீரென கூட்டணிகட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க.,வில் சீட் கேட்க தயங்கிய தலைகள் எல்லாம் தற்போது ஆர்வமாக முன் வருகின்றனர்.

இவ்வாறு தெரிவித்தனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்