தேர்தலில் விசாகன்? வேண்டுதலில் ரஜினி மகள்

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில், நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா தன் கணவருடன் தரிசனம் செய்தார்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடத்தில் அமைந்துள்ள அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலுக்கு நேற்று காலை 9:00 மணிக்கு நடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, இவரது கணவர் விசாகன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

மூலவர் பிரளயகாலேஸ்வரர் மற்றும் தாயார் அழகிய காதலி அம்மன் சன்னதியில் தன் பெயர், கணவர் மற்றும் குழந்தைகள் பெயரில் சவுந்தர்யா அர்ச்சனை செய்தார்.

தொடர்ந்து பிரகாரத்தில் உள்ள நவகிரகம், வினை தீர்த்த விநாயகர், மலைக்கோவில் சவுந்தரேஸ்வரர் சன்னதி, துர்க்கை, பைரவர், சூரிய பகவான், நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு, காலை 9:21 மணிக்கு புறப்பட்டனர். ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மட்டுமே உடனிருந்தனர்.

பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில்பஞ்சமி திதியில் வழிபட்டால், முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கி, நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

லோக்சபா தேர்தலில் சவுந்தர்யா கணவர் விசாகன்போட்டியிடுவதாக தகவல் பரவி வரும் நிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இக்கோவிலுக்கு பூஜை செய்ய வந்ததாக ரசிகர்கள் கூறுகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்