தேர்தலில் பா.ஜ., பொருட்டல்ல: நெல்லை முபாரக்

''தமிழகத்தில் பா.ஜ., ஒரு பொருட்டல்ல. அ.தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது,'' என, எஸ்.டி.பி.ஐ., கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

லோக்சா தேர்தலில், எஸ்.டி.பி.ஐ., கட்சி அ.தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது. எங்களுக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். மக்களுக்காக உழைக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கும், அ.தி.மு.க., கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். திண்டுக்கல் தொகுதியில் நிறைய வளர்ச்சிப் பணிகள் செய்ய வேண்டி உள்ளது. இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எதையும் செய்யவில்லை. எனவே, திண்டுக்கல் தொகுதியை கேட்டு பெற்றோம். வெற்றி பெறுவோம்.

பா.ஜ., கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறுவது மாயை பிம்பம். அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. தமிழகத்தில் தங்கள் இருப்பை காட்ட துடிக்கின்றனர். தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்பே, தேர்தல் பிரசாரத்தை நடத்தி, அவர்களுக்கு தோதாக குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற குயுக்தியோடு, பா.ஜ., வேலை செய்கிறது.

தமிழகத்தில் பா.ஜ., ஒரு பொருட்டல்ல. தி.மு.க., - அ.தி.மு.க., என இரு கூட்டணி தான் உள்ளது. அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது. இக்கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்