தேர்தலில் வெற்றி பெறுவாரா? தமிழிசைக்கு திருஷ்டி கழிப்பு

புதுச்சேரி ராஜ்நிவாசில் முன்னாள் கவர்னர் தமிழிசைக்கு, பூசணிக்காய், தேங்காய் மற்றும் எலுமிச்சை பழம் சுற்றி திருஷ்டி கழிக்கப்பட்டது.

கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சென்னையில் இருந்து நேற்று மதியம் புதுச்சேரி ராஜ்நிவாசுக்கு வந்தார். காரில் இருந்து இறங்கியவுடன், ராஜ்நிவாஸ் வளாகத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டார். கற்பூரம் ஏற்றி சுவாமிக்கு ஆரத்தி காண்பித்தார்.

ராஜ்நிவாசுக்குள் சென்ற தமிழிசைக்கு, கவர்னர் மாளிகை ஊழியர் பூசணிக்காயை சுற்றி உடைத்து திருஷ்டி கழித்தார். தொடர்ந்து, தேங்காய் மற்றும் எலுமிச்சை பழத்தில் கற்பூரம் ஏற்றி சுற்றி திருஷ்டி கழித்தார்.

பின், ராஜ்நிவாசில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தமிழிசையை சந்தித்து பேசினர்.

பின், தமிழிசை சென்னைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக, அவருக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.

நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்க தமிழிசை திட்டமிட்டுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்